பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

  • உலகம் யாவையும் தாமுள வாக்கலும் என்பது கம் பராமாயணத் தில் வருகிற, கம்பன் எழுதிய முதற்சொல்.
  • உலகெலாம் உணர்ந்து ஒதற்கரியவன் என்பது பெரிய புராணம் பாடிய சேக்கிழார் வாக்கு.
  • வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து, வான் புகழ் கொண்ட தமிழ் நாடு என்று பாரதியும் பாடுகிறாார். -

ஆக, வள்ளுவரும் தனது முதல் குறட்பாவில் , ஆதி பகவன் முதற்றே உலகு என்று உலகைக் குறித்துப் பாடி, தன் உயர்ந்த உள்ளத் தை, பரந்த தமிழ் ப் பண்பாட்டை, வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறார்.

உலகு என்றால், உயர்ந்தோர் என்றும், ஒழுக்கம் என்றும், பூமி என்றும் , மக்கள் என்றும் அர்த்தம் உண்டு. அது போலவே, உலகம் என்று சொன்னாலும், நன்மக்கள், சான்றோர், உயர்ந்தோர், மக்கள் தொகுதி என்பதுடன், சொர்க்கம் என்ற

பொருளும் உண்டு.

இப்போழுது, அர்த் தங்களை சேர்த்துப் பார்ப்போம்.

மூலமும் முதன்மையும் முன்னதுமாக இருக்கிற சூரியனை, முதலாக வைத்தே, பூமியில் உள்ள மக்கள் கூட்டமும் , சான்றோரும் வாழ் வை நடத்தும்

வளமையைப் பெற்றிருக்கின்றனர்.

சூரியனை ஆதிப் பொருள் என்றே, சங்க

வெங் பெங்கள் சாக் இாங்கள். வேகங்கள். விவிலியம்.