பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

உண்டாயிற்று. ஒம் காரமே ஒளிமயமான பிரம்மனாய் எண்ண வேண்டும் என்பது தான் கொள்கை’

ஆகாய மண்டலத்தினை ஆட்சி செய்யும் தேவதையாக சூரியனே விளங்குகிறான். தேவர்களின் கண்ணாக, சூரியனை வேதம் விவரிக் கின்றது. மேலேயிருந்து இவன், பூமியில் உள்ள எல்லா வற்றையும் காணக் கூடியவன். தினத் தை, இவன் பூமியில் உண்டாக் கித் தருவதால், இவனுக் குத் தினகரன் என்று பெயர் வந்தது.

பேரொளிக் கும் , பேராற் றலுக் கும் பருப் பொருளாய் விளங்குபவன். மூச்சுக் காற்றின் உறைவிடமாக சூரியன் இருக்கிறான்.

கிறிஸ்து பிறப்பதற்கு, சில நூற்றாண்டுகளுக்கு முன்பே சமணரும் பெளத் தரும் , தமிழ் நாட்டுக்கு வந்து விட் டார்கள் என பல சாசனங்களால் அறியலாம். (1)

சமண நூலான சிலப்பதிகாரத்தில் தொடக்கமான வாழ்த்துப் பகுதியில், ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்

என்று இளங்கோவடிகள் சூரிய வணக்கம் பாடுகிறார்.

பெளத்த நூலான மணிமேகலையைப் பாடிய சீத்தலைச் சாத்தனார். நூலின் பாகுபாட்டு முறையை விளக்கிக் கூறம் பகுதியான பதிகம் பாடும் போது, இளங்கதிர் ஞாயிறு என்று தொடங்குகின்றார்.

சூரியனுக் குத் தருகிற மிக முக்கியமான பெருமையாக, திருக் குர்ஆனில் வருகிற, சில