டாக்டர் சி. இலக்குவனுர்
எம். ஏ., எம். ஒ. எல்., பிஎச். டி.
வழங்கிய
அணிந்துரை.
உலகத்தார் உள்ளிருள் நீக்கும் ஒளி விளக்காம் திருக்குறளுக்கு உரைகளும் விளக்கங்களும் பல்கிப் பெருகி ஊற்றுப் பெருக்கென வெளிவந்துகொண் டிருக்கின்றன. அவற்றுள் புதுமை பெற்றிலங்குவன சிலவே. அவற்றுள் ஒன்று வள்ளுவர் வாழ்த்து' எனும் இனிய நூலாகும்,
இதனை யாத்துள்ள புலவர் கோவை, இளஞ்சேரன் யாரும் மேற்கொள்ளாத முறையை மேற்கொண்டு மணமக்களுக்கு வள்ளுவர் பெருமானே வாழ்த்துவது போல் திருக்குறட்பாக்களைத் தெளிவுற விளக்கிச் செல்லும் நயம் மிக மிகப் பாராட்டற்குரியது.
'இன்பமும் பொருளும் அறனும் என்ருங்கு' என ஒல்காப் பெருமைத் தொல்காப்பியர் உரைத் தாங்கு இன்பத்தில் தொடங்குவது ள்வரும் விரும்பத் தக்கதாகும்.
புதுமையும் இனிமையும் பொருந்த, தேனுட் பொதிந்துள்ள மருந்து போல் திருக்குறளறத்தை விளக்கியுள்ள புலவர் இளஞ்சேரன் இன்றமிழ்த் திறனைப் போற்றுதும்.