பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றில் இடம் பெற்று விட்டோம் என்று வான ளாவிய மகிழ்ச்சியில் தி ளத்த வீரர்கள் நால்வரும், ஒருவரை ஒருவர் தேடி ஓடிவந்தனர். வியர்வைக் குளமாக ஈரம் படிந்த தங்களது தேகத்தையும் பாராது, ஆரத்தழுவி, தங்களது அளவிடற்கரிய ஆனந்தத்தை வெளிப்படுத்திக் கொண்டனர்.

வீரப் புன்னகை, வெற்றிப்புன்னகை அவர்களுடைய திருமுகங்களிலே திருவிழாக்கோலமாகத் திகழ்ந்தது. திருஷ்டி பட்டுவிடுமோ என்கிற அளவுக்கு அவர்களது ஆனந்தம் கொடி கட்டிப் பறந்த நேரத்திலே, திடீரென்று இடிவந்து வீழ்ந்தது போல, அவர்களது இதயத்தைத் தாக்கிய துயரச் செய்தி கேட்டுத் துடித்தனர். துவண்டனர். ஒருவரை ஒருவர் பார்த்து, என்ன செய்வதென்று தெரியாது திகைத்தனர். மலைத்தனர். ஊமை நெஞ்சங்கள் ஓங்காரமாக வீழும் அருவி போல சோகப் பெருமூச்சை இறைத்துவிட்டன.

விளையாட்டுப் பந்தயங்களிலே இப்படியும் நிகழும ! 88,000 பார்வையாளர்களுக்கு மேல், விழித்த விழியை இமைக்காது, யார் ஜெயிப்பார்கள் என்று கருத்துான்றிப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, இப்படியா முடி வெடுப்பார்கள்? இப்படியா ஏமாற்றுவார்கள்? தங்கள்