பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிகாட்டும் விளை யாட்டு வீரர்கள். 7 I

த ன் னு ளை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறேன்' என்று ஒன்பது குழந்தைக்குத் தந்தையான அவர் பூரிப்புடன் கூறி புளகாங்கிதம் அடைந்தார்.

ஜாவோ கார்லஸ் டி ஒலிவிரா (ioao Carics de 0liveira) எனும் பிரேசில் நாட்டு வீர இளைஞன் ஒன்பது குழந்தைகளில் ஒருவனுகத்தான் தோன்றின்ை. வறுமைப் பிடியிலே சிககி வதங்கிக் கசங்கிய அந்த ஏழையின் மகன், இளமைக்காலத்தை கல்வியில் செலவிடாமல்,தன் வயிற்றைக் சழுவ, பட்டினிப் பேயி டமிருந்து தப்பிக்கொள்ள, கார்களே

க் H. ■ 睡 聶 -> ... . ہیے ؟ 3. ழுவிக் அ5 Tசி lெ ாங்கிக் 5, Too LiD க! தி தி L– வேண் Lj. யிருந்தது.

விவரம் தெரிந்தவரை அந்தப் பணியிலேயே வாழ்ந்து வறுமையை பொறுமையுடனும் விடாப்பிடியுடனும் விரட் டிக்கொண்டிருந்தான். வறுமையின் கொடுமையிலிருந்து அவனை மீட்டு மகிழவைத்தது விளையாட்டில் கொண்டிருந்த அவனுடைய உவப்பும் உற்சாகமும்தான்.

இயற்கையிலேயே உடல்திறமும் வளமும் பெற்றிருந்த அவன், தன் பணிநேரம் போக, கால்பந்தாட்டத்தை விளையாடி மகிழ் ச்சியடைந்த வண்ணமிருந்தான். காலம் அவனை வளர்த்தது. கட்டிளங்காளேயாக மாறினன். கால்பந் தாட்டத்தை இன்னும் அவன் விடாமல் ஆடினன். சிறந்த வீரன் என்று அதிலும் புகழும் வண்ணம் ஆடினன். கூடைப் பந்தாட்டமும் ஆடினன். அப்படி ஆடிவந்தநாளில், உடற்கல்வி ஆசிரியர் ஒருவரின் கண்களில் அவன் பட்டு விட்டான். ராபர்டோ டி வெஸ் கான்சிலஸ் என்பது அவர் பெயர். ஆறடி இரண்டங்குலம் உயரம் உள்ள நீ ஏன் உயரத் தாண்டும் போட்டியில் முயற்சி செய்யக்கூடாது' என்று கேட்டுவைத்தார் அறிவுரை தந்தார், போட்டிருந்த உடைகளுடனே எளிதாக ஆறடி உயரத்தை அவன் தாண்டிக் காண்பித்தபொழுது, அவர் அயர்ந்தே போளுர், அந்த திகழ்ச்சியே அவனை திசை திருப்பிவிட்டது. ஒடுகளப்

போட்டியின் பக்கம் வந்துவிட்டான்.