பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வம் எங்கே? சூரியன் போல வந்து தினம் புது ஜோதியைக் காட்டுதம்மா -தெய்வம் சந்திரன் ரூபத்திலே வந்து-மன சாந்தியை ஊட்டுதம்மா. மாமழை ரூபத்திலே வந்து இந்த மாநிலம் காக்குதம்மா-தெய்வம் மாசற்ற காற்றிவிலே வந்து நம்ம மூச்சில் கலக்கு தம்மா. பருவத்தின் காலத்திலே வந்து பசும் பயிரை வளர்க்கு தம்மா-எழில் பச்சைக் குழந்தையிலே-பரம்பொருள் புன்னகை காட்டுதம்மா... 37