பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேசக் கிளி மனைவி நெஞ்சம் வெடித்தலற பாசந்தின் தெய்வத்தாய் பெற்றஉயிர் பற்றிவிழ நீசக் குணமுடையார் நின்னைக் கேலிசெய்ய தேசபக்தர் திருக்கூட்டம் தெருவிலே பிரார்த்திக்க வைத்தியனே வரவில்லை வாடகைக்கு வக்கில்லை வந்தவர்கள் குந்த ஒரு ஒற்றைச்சாண் நிழலில்லே கருமீசைக் கடன் காரன் கதவை இடிக்கையிலே கருகிவிட்ட கவியுள்ளக் கரித்துண்டுப் பொடியாக ஒசிக் கவிதைக்கு ஒட்டாண்டிப் பத்திரிக்கை ஆசிரியக் கொக் கொருவன் அங்கு வந்த வேளையிலே, வாழ்வின் கவிபாட - வார்த்தைகளைத் தேடுகிருய்! வறண்டுவிட்ட உதடுகளில் வார்த்தைவந்து நின்றுவிட வாடிவிட்ட விழியோரம் வண்டல் கவி படிய நாத உருவாகாத நற்கவிதை உன் நெஞ்சின் 154