பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டறுத்த வெறியாட்டைக் கழுத்தொடிக்கத் தாமதமேன்? பாராளும் மதவெறியின் பழங்கத்தல் கட்சிகளே சேருகும் இரத்தமழை கொட்டுவதும் காற்ருலோ? யார் செத்தால் நமக்கென்ன, எனத் துரங்கும் மானிடரே! ஊர்துடிக்கும் சண்டையெல்லாம் உம்மதிப்பு ஒங்குதற்கோ? மங்காத மாணிக்க மரபொளிரும் வங்கமெனும் சிங்காரத் தாய்நாட்டின் செல்வியருள் தனித்தேவி! எங்கேனும் இதுபோன்ற இணையற்ற நரகுண்டா? இங்கிந்தப் பொடியர்களின் இடையொடிக்கத் தாமதமேன்? ஐப்பசியின் அடைமழை போல் அடங்காமல் விட்டுவிட்டுக் கொப்புளித்துக் குலைகடிக்கும் கூன் எண்ணப்பாவிகளைச் செப்புருக்கும் தீயிட்டுச் சேதித்துச் சிதைபோட்டு முப்போதும் இலதாக்கி முளைகருக்கத் தாமதமேன்? .174.