பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வம் முன்னைப்பழம்பொருளின் முகவரியை யானறியேன்! மூத்தபெருமறைகட்கும் முகமூடிபோடுகிரு.ர். பின்னைப் பல மதமும் பெரியதலை வலியானுல் பேரன்புத் தெய்வத்தைப் பார்க்கும்விதம் எந்தவிதம்? என்னைப் படைத்தபொருள் ஏனின்னும் வரவில்லை என்றெல்லாம் எண்ணியே ஏங்கினேன் அந்நாளில் தன்னைப்பற்றிவிட்டத் தனையர்க்குத் தெய்வத்தின் தன்மையறிவிக்கத் தான்வந்த மாசக்தி!