பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவன் கண்ட அயோத்தி யுத்தமற்ற அன்புபுரி கவிகண்ட கோசலத்தில் காலமழை வருவித்த தவஞான உத்தமிகள் சக்திகளின் ரூபமெனில் சிவமென்று வீரர்களை சொல்லித்தான் தெரியணுமோ? ஜெயங்கொண்ட அந்நாட்டில் சனிபகவான் தொல்லையிலை வயங்கொண்ட வளநகரில் வஞ்சகரின் நெஞ்சமிலை நயங்கொண்ட நன்மக்கள் நாவொன்றே நீதிசபை பயமென்ற பேச்சறியா பொன்னுடு அந்நாட்டில். தேர்ந்தவர்கள் ஆண்டதனுல் தேர்தல் எனும் தொல்லையிலே சேர்ந்தவர்கள் சீலத்தால் செறுபகையின் புகையில்லை சார்ந்த்ஜன நாயகனய் ஜகம்புகழும் தயரதனைக் கூர்ந்தமதிக் குவலயமே கோனென்று கொண்டாடும்! 8 xxxiii