பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதோ! மனித மந்தையின் குேதிவிஇே மன் வெறியரால் ஏவப்பட்ட அடிமை விஞ்ஞானதி தால் விளைந்த அந்திமக் காடசி அதர்மத்தின் பரிசு அகந்தையின் முடிவு! கொடுமையின்திர்ப்பு! விண்வேந்தன் காய்ந்திட்டான். வாட்டும் கனல் வனத்தே மண்மாது கர்ஜித்தாள் மண்டலங்கள் சிதறிடவே. கால் வெடித்துப் பொரியாகும் பெண்ணுெருத்தி பேயாகிப் போதை நடங்கொண்டதுபோல்! வகிடெடுத்துப் பெண்தலையை வாளாலே சீவுதல்போல் பகிரண்டந் தன்னையொரு பூகம்பம் வெட்டி வெட்டிச் சகிக்காத சாக்காட்டைச் சாதிக்கும் நிலையதனை யுகக் காலம் போயிடினும் உள்ளபடி சொல்வார் யார்? கண்கள் தெறித்து விழும் கானல் மூண்டு எழும் மின்னல் வெட்டி எழும் மேல் வான் சிதறி விழும் 11