பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பற்ற பகல் வேஷக் கும்பல் சில்லோர் பெரியவர்கள் போல் நடித்துப் பேசவல்லோர் பொய்யுடவின் மோகத்தால் முன்னும் பின்னும், பெரிதாகப் படம்பிடித்துப் பாடிக்காட்டிப் பெருநாட்டின் பிள்ளைகளைச் சீரழி - - பாவத்தை, பணம்சேர்க்கும் விபசாரத்தை, பெண்மைத் தோல் சதைவிற்கும் வியாபாரத்தை... , பெட்டைமனக் குள்ளர்களின் பலவீனத்தை பயங்கரத்தைக் கலையென்று போற்றி நல்ல பட்டங்கள் பொன்னுடை வழங்குகின்ற படித்தவர்கள் திரிகின்ற இந்த நாட்டில் புது வாழ்வு மலருமா... பெருமை உண்டா? 25