"இத்தொகுப்பு நூல் விலையுயர்ந்த மணிகள் ஏழினைக் கொண்ட் ஒருமாலை யெனில் மிகையாகாது. எங்கும் ஆழ்ந்த கருத்துக்கள் விரவி கிடக்கின்றன...... அரிய கருத்துக்களை அறியவேண்டும் என்ற ஆர்வமும், எளிய தமிழ் நடையின் அழகைப் பருகவேண்டுமென்ற ஆசையும் உள்ளவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்”
"திரு. கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்களின் அரசியல் பேச்சு ஒன்று, ஆராய்ச்சிப் பேச்சு ஒன்று, சமூகப் பேச்சு ஒன்று, விவாதப் பேச்சு ஒன்று, வியாபாரப் பேச்சு ஒன்று, வெளிநாட்டுப் பேச்சு என்று ஆக ஏழு சிறந்த வானோலிப் பேச்சுக்களைத் தேர்ந்தெடுத்து அழகிய நூல் வடிவாக அச்சியற்றப் பெற்றுள்ளது.”
-
”நல்ல விறுவிறுப்பான நடையில் தெளிவாக விஷயங்களை அலசி ஆராய்ந்து எடுத்து உரைத்திருக்கிறார் ஆசிரியர்” '
பேச்சுக்கலை பயிலும் இளைஞர் கரத்தில் எல்லாம் தங்கும் உரிமையும் பெருமையும் இந்நூலுக்கு உண்டு.”
பொருட் செறிவுடனும் நகைச் சுவையுடனும் பேசுவது அறிஞர் கி. ஆ. பெ. விசுவநாதத்தின் தனிச் சிறப்பு...... கல்லூரி மாணவர்கட்குப் பயனற்ற புத்தகங்களை வைக்கும் சென்னைப் பல்கலைக் கழகத்தின் கண்ணுக்கு இப்புத்தகம் படுமா ?”