பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழும் கவிஞர்கள் }.} இவை இணைவதற்கு இறைவன் காதல் உணர்வை ஊட்டியுள்ளான். இதனால்தான் ஆண் பெண்ணை நாடுகின்றான். பெண் ஆனை நாடுகின்றாள், காதலுணர்வினால் இருவரும் இணைகின்றனர். புணர்ச்சி நடைபெறுகின்றது. ஒரு புணர்ச்சியில் இலட்சக்கணக்கான விந்தணுக்கள் வெளிப்படுகின்றன. அனால் பெண்ணிடமுள்ள சூற்பைகளில் (Ovaries) இருந்து மாதம் ஒரு முட்டையணுதான் வெளியாகின்றது. பக்குவநிலையில் இரண்டு பக்குவநிலைகளும் ஒன்று கூடிச் செயற்படும்போது இந்த விந்தனுக்கள் யாவும் முட்டையணுவின் கருக்குழலில் (Felloantube) சந்திக்கின்றன. புறஉலகில் ஒரு பெண்ணுக்கு, சுயம்வரம் நடக்கும்போது பல மன்னர்கள் பங்கு கொள்வதுபோல், அக உலகில் சுயவரம் நடைபெறும்போது இலட்சக்கணக்கான விந்தணுக்கள் ஒரு முட்டையணுவைச் சந்திக்கின்றன. பெண் யாரேனும் ஒருவருக்குத் தெரிந்து மாலையிடுவது போல அகவுலகில் வன்மையான விந்தணு ஒன்று தெரியாமல் முட்டையணுவைத் துளைத்து உட்புகுகின்றது. முட்டையணு பிற விந்தனுக்கள் உட்புகாமல் கதவடைத்துக் கொள்ளுகின்றது. இவ்வாறு இணைதலே சூல்கொள்ளல். கருவடைதல் (fertilization) என்ற பெயர்களைப் பெறுகின்றன. பின்னர் சூல்கொண்ட முட்டையணு மெதுவாக நகர்ந்து சூற்பையை அடைந்து ஏதாவது ஓரிடத்தில் புதைந்து கொண்டு வளர்கின்றது. புதைந்து கொள்ளும் இடத்திலிருந்து தொப்பூள் கொடியாக இணைந்து கருவளர்ந்து குழந்தையாகின்றது. பத்து மாதம் ஆனதும் பெண் கருவுயிர்க்கின்றாள். பாலூட்டும் பிராணிகள் மனிதன் உட்பட அனைத்திலும் பக்குவமடைந்த பிறகே கருவுயிர்த்தல் நடைபெறுகின்றது. ஆனால் பறவை இனங்களில் பக்குவப்படாத நிலையில் முட்டையாக வெளிவந்து பெண்ணினத்தால் அடைகாக்கப் பெற்றுக் குஞ்சு ஆகின்றது. என்னே இறைவன் விந்தை என்று நாம் வியப்படைகின்றோம். ஒற்றையணுக்கள் இரட்டையணுக்களாக மாறுவதற்கு இறைவன் அளித்த உணர்வு காதல். அது இன்பமாக மாறுகின்றது. இன்பம்தான் இறுதி. அது உண்டாகவில்லையானால் படைப்பு நடைபெறாது. எல்லாவுயிருக்கும் இது பொருந்தும். இதனையே தொல்காப்பியர் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தான்.அமைர்ந்து வருஉம் மேவற் றாகும்