பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#22 லாழும் கவிஞர்கள் سياسي في என்று கூறுவார். முதல் மூன்று அடிகள் சிந்தையின் தொழில்கள். நான்காவது அடியில் வினை செயா என்பது தோளைக் குறிப்பது. சிந்தையும் தோளும் - எண்ணமும் செயலும் சேர்ந்தது மனிதம். மனிதன் செயற்படுவதற்கு ஒரு மூலமந்திரம் போல், இரத்தினச் சுருக்கமாகச் சிலவற்றைக் கூறுவார். வென்றி யென்பது வேண்டும் பொருளொடு ஒன்றி ஒழிய துழைப்பவர்க் குறுவதாம் மானிடர் தமக்கிம் மண்ணிற் பெருமைகள் வானிடை யிருந்து மழையெனப் பெய்வதில் பயிற்சி இன்றெனின் பண்படல் இல்லைநன் முயற்சி இன்றெனின் முழுமை காண்கிலம் பயிற்சி. கல்வி, எம் படையெனக் கொண்டோம் முயற்சி யுண்டெனின் முழுமை காணுவம் மனிதன் முயலும்போது பல இடர்ப்பாடுகள் நேரிடலாம்.இக்கட்டுகளும் துன்பங்களும் தொடரலாம். இச் சமயங்களில் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். நமக்கு வரும்துன்பமெலாம் நம்மை வடிவப்படுத்தவே பயன்படுகின்றன. இக்கருத்து ஒரு கவிதையில் அமைகின்றது. என்னைச்செதுக்குகிறாள்-இயற்கை இன்னும் உயர்த்துகிறாள் பொன்னைச் சுரங்கத்திலே-எடுத்தவள் புடம்.இடுகின்றாள் நம்மீது ஏற்படும் சிற்றுளிக் காயங்கள் நம்மைச்சிற்பமாக்குவதற்குப் பயன்படுகின்றன. பற்றும் துயரமாகிய நெருப்பில் நமதுயிர் பக்குவப் படுகின்றது. வெயிலில் குளிப்போருக்கு வெயில் சுடுமா? சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சு நோக்கிற் பவர்க்கு என்பது வள்ளுவர் வாக்கல்லவா? தடைகளைப் படிகளாகக் கொண்டு முன்னேற வேண்டும்.இப்படி மானிட நேயம் உருவாகின்றது. இறுதியாக அவர் கூறுவது, தானாக ஏதும்இந்தத் தரணிவந்து சேர்வதில்லை ஊனாலும், நெஞ்சின் உரத்தாலும் கொள்கையெனும் ...మీ. - & 3. 饮 岭 & திண்மையினால், வேரோடு சிறுமையெலாம் தீர்ப்பதெனும் உண்மையினால் அல்லாது உயர்வெதுவும் காண்பதில்லை இவற்றால் பெறப்படுவது. முயற்சி திருவினை ஆக்கும் குறள் 616) என்பது.