பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் ஆ. பழநி, 甘酸氧 நாசிக்கில் பிறந்த போது எப்பழி தான்சு மத்தேன் .ே சிடின் வணிக தானார் பேராசைக் குணத்தால் இன்றோர் வேசிக்குப் பிறந்தேன் போன்று வீண்பழி தாங்கி வாழ்வேன் யோசிக்கும் திறத்திச் என்மேல் ஒருபழி கூறல் ஆமோ? அடுத்தும் "என்னை இகழாதீர், என்னை உருவாக்கிய விரோதியை இகழுங்கள், எய்தவர் இருக்க அம்பை நோவது ஏன்? என்று அழும் கறுப்புப் பணத்தின் குரல் நம்மிடம் இரக்கத்தை எழுப்புகிறது. அதன் குரலைக் கேட்போம். எத்தனை யோபி றப்பை எடுத்துதான் அலுத்து விட்டேன் அத்தன்நீர் ஆத லாலே என்பிறப்புறுப்பீர் நீங்கள் எத்துதல் ஏய்த்தல் விட்டால் என்பிறப் பறுந்து போகும் இத்தரை வாழ்வு தீரும் இஃதென்றன் விருப்ப மாகும். ஞ்சினேன் எனைக்க றுப்புப் பணமெனக் கிளத்தல் வேண்டா வஞ்சகன் ஒருவ னாலே வான்பழி சுமந்து வாழ்வேன் நெஞ்சினுட் கிடக்கை எல்லாம் உரைசெய்தேன் கேட்ட நீவிர் கொஞ்சமென் மேலி ரக்கம் கொள்வரேல் ஒன்று போதும். “காந்தியார் இன்று வந்தால்" என்ற கவிதையைப் படிக்கும் போது நம் கண்களில்நீர் சுரக்கின்றது. காந்தியடிகளே சொல்வதாக கவிதை அமைகின்றது. காந்தியடிகளின் கொள்கைகள் கல்லறையில் அடங்கி விட்டன. நிர்மாணத் திட்டங்கள் நிர்வாணமாகி விட்டன. கிண்டலும் கேலியும் மின்வெட்டுகள் போல் அமைந்த இக் கவிதை நம் உள்ளத்தை உலுக்குகின்றது. பத்தினியர் தேர்விற்குப் பாஞ்சாலி வேட்புமனு: வைத்தால் அதையும் வரவேற்கும்.இந்நாடு புலியும் சிறுத்தைகளும் புலால் உணவின் கேடுகளை மொழிந்தால் அதையும்வாய்மூடாதுகேட்டிருக்கும் என்ற கிண்டலைக் காணலாம்.