பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 வாழும் கவிஞர்கள் கையாண்டு நகைச் சுவையுடன் கவிதைகளைப் படைத்துள்ளார். விரிவஞ்சி அவற்றை ஈண்டு நான் காட்டவில்லை. இறுதியாக, தமிழென்னும் முன்றெழுத்துச் சீரணங்கை நல்ல தாய்போலக் காத்திருந்த வேந்தர்கள் மூன்றே தமிழ்தந்த நல்லிசையும் நாடகமும் இயலும் தாங்குபுகழ் பெருஞ்செல்வ நற்கலைகள் மூன்றே தமிழ்வேதம் எனவமைந்த திருக்குறளில் அமைப்பில் தவறின்றிக் கொண்டுள்ள பிரிவுகளும் மூன்றே தமிழ்தழைக்கத் தழைத்திருந்த சங்கங்கள் மூன்றே தமிழன்னை புகழ்வென்ற காலங்கள் முன்றே 'மூன்று என்ற எண் விளையாட்டும் அற்புதம். எண்தானே எழுத்தை விடச் சிறப்பு? எண்ணென்ப ஏனை எழுத்தென்ப' என்ற குறளில் எண்தானே முதலில் வைக்கப் பெற்றுள்ளது? மக்கள் மனதில் பதிவதற்குப்பேருந்து, வீட்டு எண், காவலர் பெயர்.அணு முதலியவற்றில் எண் குறிக்கப் பெற்றிருத்தல் நினைவு கூர்தற் பாலது. வேம்பு:- - வேம்பு பற்றி ஆறு பாடல்கள் அற்புதமாக அமைந்துள்ளன. இயன்றவரை பாடல், பாடற்பகுதிகளை ஈண்டுத் தருகின்றேன். பெரும்பாலும் அவை வேம்பு தரும் பயன்களாகவே அமையும். சலசலக்கும் காற்றாடிக் கைக ளாலே சாலையிலே நிழல்விரிக்கும் நல்லோர் நாமே உலகத்துக் கண்களிலே தெரியும் பேய்மை உள்ளங்கள் தஞ்சமுறும் இல்லம் நாமே பலர்வாழ எமையளித்து வாழு கின்றோம் பயணதனால் வளர்மெழுகு வத்தி நாமே வெம்புகின்ற உள்ளத்தின் நன்மை காட்டி விரைகின்ற நோய்போக்கும் விருப்பத் தாலே நம்பிக்கைச் சின்னங்கள் தாமும் நாமே நாடெல்லாம் மாரியம்மை விசிறி நாமே இல்லங்கள், சாலைகள், தோட்டங்கள், தோப்புகளில் அணி செய்யும் வேப்ப மரங்களின் பயன் சொல்லி முடியாது. மக்கள் பெருவாரியாகப் பயன்படுத்தும் நீம்சோப்பு வேப்பெண்ணய்யால் தயாரிக்கப்பட்டது. வேப்பம் பிண்ணாக்கு செடிகளுக்கு நல்ல உரமாகும். இத்தகைய வேம்புக்கு முக்கியத்துவம் தந்து இலக்கியமாக்குகின்றார்.