பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியரசு. இரா. வைரமுத்து திரை உலகில் கவிஞர் கண்ணதாசனுக்குப் பிறகு, கவிஞர் வைரமுத்துவும் கவிஞர் வாலியும் சிறந்த பாடலாசிரியர்களாகத் திகழ்வதை நாம் அறிவோம். இவர்களைத் தொடர்ந்து கவிஞர் மேத்தாவும் திரைப்பாடலாசிரியராகச் சேர்ந்துள்ளது நமக்குத் தெரியும். கவிஞர் வைரமுத்து மதுரை மாவட்டம், பெரியகுளம் வட்டம் வடுகப் பட்டியில் பிறந்தவர் (1953. ஊர்ப் பக்கத்திலுள்ள உயர்நிலைப் பள்ளியொன்றில் பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு சென்னை வந்து பச்சையப்பன் கல்லூரி என்னும் கல்விப் பாசறையில் புகுந்து ஆறாண்டுகள் பயின்று தமிழில், எம்.ஏ. பட்டம் பெற்றவர். தமிழ் இவரை ஆட்கொண்டதா? இவர் தமிழை ஆட்கொண்டாரா? என்று புரியாத நிலையில் ஜீராவில் ஊறிக் கிடக்கும் குலோப்ஜான் போல் இனிப்பு நீரில் நீந்திக் கிடக்கும் கல்கத்தா ரசகுல்லா போல்-தான் வேறு தமிழ் வேறு என்றில்லாமல் தமிழோடு ஒன்றி, உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவர். திரைப்படப் பாடலாசிரியரின் பணி சுதர்மமாக அமைந்தது இறைவனின் திருக்குறிப்பு. - பச்சையப்பன் கல்லூரியில் பயின்ற ஆறாண்டு மாணவப் பருவத்தில் மூன்று ஆண்டுகள் 7ஆவது முதல் 21 ஆவது அகவை வரை தாமும் யாப்பும் ஒருவருக்கொருவர் அடிமையாயிருந்ததற்குச் சான்று."என் பழைய பனை ஓலைகள்" என்ற கவிதைத் தொகுதி. பல மாதங்களாகப் பட்டாளத்தில் இருந்து வந்த ஒருவன், தன் பருவ மனைவியின் கட்டுக்குலையாத அழகினைக்கண்டு இரசிப்பது போல் இரசித்து ருசித்தேன்" என்ற கவிஞரின் சுவையான குறிப்பு நம்மை மகிழ்விக்கிறது.இத் தொகுப்பைத் தன் வாலிபரத்தமாக கூறுவது தன்மை நவிற்சியாக உள்ளது இதில் இவர்தம் இளமைத் துடிப்புப் பளிச்சிடுவதைக் காணலாம்." இந்தக் கவிதையில் இருக்கும் சில கருத்துக்களுக்காக நான் வெட்கப்படுகின்றேன். ஆனால் ஒரு போதும் வருத்தப்பட மாட்டேன்" என்று கூறுவது உண்மையை விளம்புவதாக இருந்தாலும், "மகிழ்ச்சி அடைவதாகக் கூறவதே சிறப்பு. விளையும் பயிர் முளையிலேதெரியும் என்ற பொன்மொழிக்குச் சான்று பகர்ந்து கொண்டிருப்பது இக்கவிதை தொகுப்பு. பல கவிதைகளில் இளமைத் துடிப்பு தெரிந்தாலும் சில கவிதைகளில் அறிவு முதிர்ச்சியும் பளிச்சிடுகின்றது. பல கவிதைகள்