பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டும் எனக் கருதலாம். ஒன்றிரண்டு கற்றவுடன் ஒப்புண்டே இங்கெமிக்கு என்றலைவோர் மிக்குவரும் இந்நாளில் துன்றியதல் து.ாலுணர்வும் துண்மாண் துழைபுலமும் வாய்த்தும் எப் பாலும் பணி வதவர் பண்பு. ۸۶ - னிை அவர்களைக் காட்டும் பாடல். பாண்டியனை நினைப்பூட்டும் பார்வையினன் பாழான பழமை வேண்டான் கண்டதல்ல சங்கத்தார் தமைப்போல்வார் மனத்தில்எழும் புதுக்க ருத்தை வேண்டியமட் டுங்கொடுப்பான் வீரத்தை ஊட்டிடுவான் ஊழிக் காலம் தாண்டியதல் தமிழ்மொழிமேல் மீசையின்மேல் தனியாத காதல் கொண்டான். என்பது பாவேந்தர் பற்றிய அறிமுகப் பாடல். பெண்ணினத்தை அச்சுறுத்தி விதவை என்ற பெருங்கொடுமை வழக்கத்தைப் பழக்க மாக்கிக் கண்விழித்துப் பாராமல் தாழ்த்தி வந்தோம் கண்சிவக்க மனம்பதறத் துடித்தெ ழுந்தான் எண்ணியிவன் மறுமணத்துக் கழகம் கண்டான் எத்தனையோ மகளிர்க்கு வாழ்வு தந்து கண்ணிறங்கும் நீர்துடைத்தான் ஆத லாலே காரிகையார் வாழ்த்துகிறார் வாழ்க என்றே. ఫ్లి இது சீர்திருத்தச் செம்மல் சொ. முருகப்பா பற்றிய பாடல். இவர் செட்டி நாட்டில் ஒரு விநோதமான மனிதர். துண்ணறி திறமுடையாய் நீயும் இங்கு துணித்துணர்ந்தாய் பன்மொழியும் ஆயினும் நம் பண்ணுயர்ந்த தமிழ்மொழிக்கே நின்றன் நெஞ்சைப் பரிசளித்தாய் தமிழ்ப்பற்றே மிக்கு நின்றாய்