பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*** t .3 - هم بيته سبيتسبي ةُ கவிஞர் முடியரசன் அன்று எழுவர் வள்ளல்கள் இன்; இக்கவிதையில் அறிந்து மகிழலாம். ” து ஒரே ஒரு வள்ளல் என்ற நயம் இந்நாட்டுப் பரம்பரையில் இருவர் தோன்ற இருநிதியம் கல்விக்கே வாரித் தந்தார் முன்கூட்டிச் செய்தவர்தாம் செட்டி நாட்டு முதல்மன்னர் அழகப்பர் மற்றோர் வள்ளல் என்பாட்டுக் கடங்காது வள்ளல் உள்ளம் கொடைம.மென் றிருந்தசொல்லே சொல்லத் தோன்றும் என்ற இன்னொரு பாடலில் இரண்டு வள்ளல்களைக் காட்டுவார். பண்டிருந்த வள்ளல்கள் காடு கொன்று, குளம் தொட்டு, நகர் உண்டாக்கியது போல் வள்ளல் அழகப்பரும் செய்தார். நடப்பவர்தம் கால்வருந்த முட்கள் தைக்கும் நச்சரவம் பலநெளியும் கொடிய காட்டைக் கெடுத்தொழித்து நகராக்கிக் கல்விக் கூடம் கிளைத்தெழும்பத் தானுறையும் இல்லும் சேர்த்துக் கொடுத்திருக்கும் இயல்புடையான் ஈட்டும் செல்வம் அத்தனையும் ஈத்துவக்கும் குமணன் போல்வான் படித்துவரும் பன்னுறு மக்கள் உள்ளம் பைந்தமிழால் அள்ளுறிப் பாடும் உள்ளம். மழலையர் பள்ளி முதல் முதுகலை வரையிலும் உடற் கல்வி, விஞ்ஞானத் தொழில் நுணுக்கம் பொறியியல் வரை கல்வி கற்கும் நிலையங்களை நிறுவிப் பிற்காலத்தில் பல்கலைக் கழகம் அமைக்கும் வாய்ப்புக்கு அடித்தளம் அமைத்த வள்ளலுமானான் என்கின்றார் கவிஞர் வணிகத்தில் பெரியதொரு இலாபம் என்றால் வருமுன்னே அத்தொகையைக் கொடுத்தேன் என்பன். என்று கூறத்தகும் அற்புதமான நாகரிகப் பண்பை உடையவர் அழகப்பர். மேலும் பல பண்புகளைக் கவிஞர் இறையன்பு நிறைமனத்தன் எனினும் தந்தை எனும்தேவே தொழுதெழுவான் உற்ற போது நிறையன்பு கொண்டவரை ஊக்கம் தந்து நிலைநிற்கச் செய்தவரை மறவா நன்றி