பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. வாழும் கவிஞர்கள் யறிவுடையன் என்பதனை விடுதி காட்டும் அரசியலில் பிறதுறையில் ஆன்ற சான்றோர் செறிநண்பு கொண்டமையைப் படங்கள் காட்டும் சிரித்தமுகம் அவர்மனத்துத் துய்மை காட்டும். காட்டுவா. முத்தாயடயாக سم : أسياً அள்ளியள்ளி வழங்குதற்குக் கையை ஈந்தான் அழகாகப் பேசுதற்கு வாயை ஈந்தான் உள்ளமெனும் ஒருபொருளை உரத்துக் கீந்தான் உடம்பினையும் கொடுநோய்க்கே ஈந்தான் அந்தோ வெள்ளமென வருநிதியம் வாழும் வீடு வினைமுயற்சி அத்தனையும் கல்விக் கீந்தான் உள்ளதென ஒன்றில்லை அந்தப் போதும் உயிருண்தே கொள்கவெனச் சாவுக் கீந்தான். பாடலில் அனைத்தும் ஈந்த செய்தியைக் கூறுவார். "உள்ளதென ஒன்றில்லை அந்தப் போதும், உயிருளதே கொள்கவெனச் சாவுக் கீந்தான் "என்ற இறுதியடி வள்ளல் குணத்தைக் கூறும் போக்கில் 3” & யின் கொடுமுடியையும் காட்டுவார். அவலச் சுவை வள்ளலுக்கு முடியரசர் விளைத்த தீமை வடுவாக அமைந்தவே உலக மக்கள் எள்ளலுக்கும் பொருந்தியதே என்று நெஞ்சில் எழுகின்ற பரிவால்.அம் மாசு நீங்க வள்ளல்புகழ் முடியரசன் பாடு கின்றேன் வண்டமிழால் பாத்தொடுத்துச் சூட்டு கின்றேன் மள்ளர்மிகு படைபலத்தாற் படைத்தார் மாசு மகிழ்ந்தளிக்கும் தொடைநலத்தால் துடைத்தேன் மாசு என்பதும் முத்தாய்ப்பான பாடல். முடியரசர்கள் பாரி வள்ளலுக்கு வடுவாக அமையுமாறு விளைத்த தீமையின் காரணமாக முடியரசனின் நெஞ்சில் பரிவு எழுகின்றது. காரணம் சாதி ஒற்றுமை. முடியரசர்கள் முடியரசன் இந்தப் பரிவின் காரணமாக அதற்குக் கழுவாயாக அம்மாசினை நீக்க இவ்வள்ளல் புகழை முடியரசனாகிய தாம் பாடுவதாகக் குறிப்பிடும் நயம் போற்றத் தக்கது. மூவேந்தருடன் இணைந்து மள்ளர்கள் வேளிர்கள் படை பலத்தால் விளைத்த மாசினைத் தாம் தமிழின் தொடை நலத்தால் துடைப்பதாகக் கூறுவது