பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IV அப்பொழிவினை "வாழும் கவிஞர்கள்” என்ற தலைப்பில் நூலாக எழுதித் தந்தார்கள். இதில் மரபுக்கவிதைக்கவிஞர்கள் பற்றி எழுதியதை மட்டும் நூலாக வெளியிட்டுள்ளோம். புதுக்கவிதைக் கவிஞர்கள் பற்றிய நூல் பின்னர் வெளியிடப் பெறும். எங்கள் தந்தையார் ஏற்படுத்திய மீனாட்சி ஆச்சி நினைவுச் சொற்பொழிவு நூல்களையும் பிறவற்றையும் வெளியிடும் எங்கள் பதிப்பகத்தில் கவிச்செம்மல் டாக்டர் ரெ. முத்துக்கணேசனாரின் தமிழ் அறக்கட்டளை வாயிலாகத் தமிழ்ச் செம்மல் டாக்டர் ந. சுப்புரெட்டியாரின் இந்நூலும் வெளிவருவதன் மூலம் பதிப்பகப் பணியை ஊக்கமூட்டிய கவிச் செம்மல் அவர்கட்கும் தமிழ்ச் செம்மல் அவர்கட்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். குன்றக்குடி - திருவண்ணாமலை ஆதீனம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளர் அவர்கள் இந்நூலுக்குத் தம் வாழ்த்தோடு அணிந்துரை வழங்கியருளியுள்ளார்கள். தமிழ்மாமுனிவராய் விளங்கிய அருள்நெறித்தந்தை தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களைப் போலவே எங்கள் இராமசாமி தமிழ்க் கல்லூரி மீதும் எங்கள் திரு. வி.க. இல்லத்தாரிடத்தும் தாயினும் சாலப்பரிந்து அன்பு பாராட்டும் அடிகளார் அவர்கட்கு எங்கள் நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம். எங்கள் பெற்றோரின் அன்புக்கும் பாராட்டுக்கும் உரிய காப்பியக் கவிஞர், நா. மீனவன் அவர்கள் எங்கள் தமிழ்த் தொண்டு தொடரத் துணை செய்யும் வகையில் நூலாசிரியரின் கைப் பிரதியை முயற்சியுடன் தட்டச்சு செய்து உதவினார்கள். காலத்தினால் செய்த