பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 வாழும் கவிஞர்கள் ஆடைகுறைக் கின்றகதை வேண்டா நல்ல அறிவுவளர்க் கின்றகதை படைத்தல் வேண்டும் வாடைமதுக் குடிக்கதைகள் வேண்டா தூய்மை வளர்க்கின்ற சிறுகதைகள் வரைதல் வேண்டும் பீடைமதம் சாதிகதை வேண்டா அன்பு பெருக்குகின்ற திருக்கதைகள் மிகுதல் வேண்டும் மேடையிலே வீசுகின்ற பூங்காற் றைப்போல் மிகவினிய சிறுகதைகள் படைப்போம் வாரீர்! என ஒரு பாடலாக வடிவம் கொள்ளுகின்றது. பொதுவாகக் கவிஞர் நாராநா ஒரு குறிக்கோள் மனிதர் எனலாம்.