பக்கம்:வாழும் வழி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

39


தாம்வந் தெய்தா அளவை ஒய்யெனத்
தான்ஞெலி தீயின் விரைவனன் சுட்டு, நின்
இரும்பேர் ஒக்கலொடு தின்மெனத் தருதலின்
அமிழ்தின் மிசைந்து காய்பசி நீங்கி
நன்மரன் நளிய நறுந்தண் சாரல்
கல்மிசை அருவி தண்ணெனப் பருகி
விடுத்தல் தொடங்கினோனாக, வல்லே
பெறுதற் கரிய வீறுசால் நன்கலம்
பிறதொன் றில்லைக் காட்டு நாட்டெமென
மார்பிற்பூண்ட வயங்குகாழ் ஆரம்
மடைசெறி முன்கைக் கடகமோடு ஈத்தனன்.
எந்நாடோ என நாடும் சொல்லான்
யாரீரோ எனப் பேரும் சொல்லான்
பிறர் பிறர் கூற வழிக்கேட் டிசினே:
இரும்புபுனைந் தியற்றாப் பெரும்பெயர்த் தோட்டி
அம்மலை காக்கும் அணிநெடுங் குன்றிற்
பளிங்கு வகுத்தன்ன தீநீர்
நளிமலை நாடன் நள்ளி அவன் எனவே.”

என்னும் புறநானூற்றுப் (150) பாடலால் நன்குணரலாம். இப்பாடலின் பிற்பகுதியிலுள்ள ‘எந்நாடோ என நாடும் சொல்லான்; யாரீரோ எனப் பேரும் சொல்லான்; பிறர் பிறர் கூற வழிக் கேட்டிசினே; தோட்டி மலை காக்கும் நளிமலை நாடன் நள்ளி அவன் எனவே’ என்னும் அடிகள் ஈண்டு குறிப்பிடத்தக்கன.

படிக் கல்லில் பட்டை பட்டையாகத் தங்கள் பெயர் பொறித்துக்கொள்ளும் தற்புகழ்ச்சி வேட்டைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/41&oldid=1104812" இலிருந்து மீள்விக்கப்பட்டது