பக்கம்:வாழும் வழி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

51


நின்றொழுக வேண்டும். (கசடு = குற்றம்; தக = ஏற்ப = பொருந்த நிற்றல் = ஒழுகுதல் நடத்தல்)

(மணக்குடவர் உரை: கற்கப்படுவனவற்றைக் குற்ற மறக் கற்க; கற்ற பின்பு அக்கல்விக்குத் தக வொழுகுக.)

(பரிமேலழகர் உரை: ஒருவன் கற்கப்படு நூல்களைப் பழுதறக் கற்க; அங்ஙனங் கற்றால் அக் கல்விக்குத் தக அவை சொல்லுகின்ற நெறிக்கண்ணே நிற்க.)

(ஆராய்ச்சி விரிவுரை) கற்கவேண்டும், அதன்படி நிற்கவேண்டும், என்பது குறள். கல்வி என்னும் பெயரில் உலகில் மக்கள் செய்துகொண்டு வருவது என்ன? பல நூற்களை வைத்துப் படித்துக்கொண்டிருக்கின்றனர். நூற்கள் என்பன யாவை? பல அறிஞர்கள் தங்கள் வாழ்க்கையில் கண்ட முடிபுகளை எழுதி வைத்து விட்டுப் போயிருக்கின்றனர்; அந்த வாழ்க்கையநுபவக் குறிப்புகளின் தொகுப்பைத்தான் நம் நூல் (புத்தகம் என்கின்றோம். அத்தகைய நூற்களைப் படிக்கின்றோம். ஏன் படிக்கின்றோம். அந்த நூற்கள் நம் வாழ்க்கைக்கு எவ்வாறு துணை செய்கின்றன? முதல் முதலில் அமெரிக்கா சென்று வந்தவன், இப்படியிப்படிப் போக வேண்டும்; இப்படியிப்படி நடந்துகொள்ள வேண்டும்’ என்று தன் அநுபவத்தை எழுதிவைத்தான். அதைப் படித்துவிட்டுச் செல்பவனுக்கு வழிப்பயணம் எளிதாகிறது. இந்த வழிகாட்டி (Guide) வேலையைத் தான் முன்னோர் எழுதி வைத்த நூற்களும் செய்கின்றன. இவற்றைப் படித்துத்தானா தெரிந்துகொள் வேண்டும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/53&oldid=1105031" இலிருந்து மீள்விக்கப்பட்டது