புலவர் சுந்தர சண்முகனார்
59
முதலில் உணவளித்து, பின்பு மிகுந்திருப்பதைத் தான் உண்ணுபவனுடைய நிலத்தில் விதையும் இட வேண்டுமோ? வேண்டா; அது தானாகவே விளையும்” என்னும் கருத்திலேயே எல்லோரும் உரை எழுதியிருக்கின்றனர். அறிஞர்களின் ஆராய்ச்சிப் பார்வைக்காக இங்கே பழைய தமிழ் உரைகள் மூன்றும், ஆங்கில மொழிபெயர்ப்பு மூன்றும் கீழே தரப்படும்:
1) “முன்னே விருந்தினரை மிசைவித்துப் பின் மிக்கதனைத்தான் மிசைவானது விளைபுலத்திற்கு வித்திடுதலும் வேண்டுமோ? வேண்டா; தானே விளையும்.”
- பரிமேலழகர்
2) “விருந்தினரை யூட்டி மிக்க வுணவை உண்ணுமவன் புலத்தின்கண் விளைதற் பொருட்டு விதைக்கவும் வேண்டுமோ? வேண்டா; தானே விளையாதோ?
-மணக்குடவர்
3) விருந்து உபசரித்து மிஞ்சினதைப் புசிப்பது, கழனிக்கு எருப்போட்டு நீர்த் தேக்கினதுபோல ஒன்று நூறாயிரம் விளையும்.
-பாரதியார்
4) “Does the field of one who partakes what remains after entertaining the guest, need to be sown with seeds?” - by V.R.Ramachandra Deetchathar