'கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை' 57
நாவால் நக்குது வெள்ளைப்பசு—பாலை
நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி
'முத்தம் கொடுக்குது வெள்ளைப்பசு—மடி
முட்டிக் குடிக்குது கன்றுக்குட்டி’
'எனது சுகதுக்கங்கள்' என்னும் கவிதை உயரிய ஒரு படைப்பு; அருமையான தத்துவ விளக்கம்:
'வான வெளிதனிலே—கவிந்தெழு
மாலைப் பொழுதினிலே
கூனப் பிறைவரவே—சிவன்திருக்
கோலம் தெளிவேன் அடி’
என்று மகிழ்ந்த கவிமணியின் இதயம்,
காவுயர் சோலையிலே—பசுவோடு
கன்று களிக்கையிலே,
தாலிப் புலிவிழவே—வருந்துயர்,
தாங்க முடியவில்லை’
என்று ஒலமிடுகின்றது. கனிவு நிறைந்த உள்ளம் கவிமணியின் உள்ளம்.
'வாழ்க்கைத் தத்துவங்கள்’ என்ற பகுதியில், ஒருவர் உயர்வுக்கு அவர் செயல்களே காரணமாய் அமைகின்றன என்னும் அரிய உண்மையினை அழகுறப் புலப்படுத்தியுள்ளதனைக் காணலாம்.
உள்ளந் தேறிச் செய்வினையில்
ஊக்கம் பெருக உழைப்போமேல்,
பள்ளம் உயர்மே டாகாதோ?
பாறை பொடியாய்ப் போகாதோ?”
இவ்வாறு கூறுவதனோடு கவிஞர் நில்லாமல், இறைவனது ஆனையினை அறச்சட்டத்தினை—எவர்