பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 வான்சுத் தொகையை அவர் உன் பணத்திலிருந்துதான் கொடுத் தார். இதிலே இன்னெரு செளகரியம் என்னவென்ருல் என் அறையில் தனிமையிலும் வசிக்கலாம்; குடும்பத்தோடும் இருக்க லாம். அநேகமாக நீ குடும்பத்தோடுதான் வருவாய் என்று கினைக்கிறேன். ஏனென்ருல் வைத்தியம் பெறப் போகிறவள் உன் மருமாள் ஆனதால் உன் மனேவியின் சகாயம் உனக்கு அவசியந்தானே? ஆளுல் எனக்கென்னவோ சென்னேயைக் காட் டிலும் இங்கே அப்படி ஒன்றும் பிரமாதமான வைத்திய அருங்கடலங் கள் இருப்பதாகத் தோன்றவில்லை. ஆனல் உன் மருமாளுக்கு மூளையிலே கோளாறு என்றும் டாக்டர் உடனடியாக இடமாற்றம் வேண்டும் என்று கூறுவதாகவும் நீ எழுதி யிருப்பதால் இந்த விஷயத்திலே நான் ஒன்றும் சொல்ல முடியாமல் இருக்கிறது. அதுவும் பம்பாய் போன்ற இடத்திற்குத்தான் உன் மருமாளே அழைத்துப்போக வேண்டும் என்று டாக்டர் குறிப்பாகக் கூறுவ தாக வேறு எழுதியிருக்கிருய். இல்லாவிடில் நான் மீண்டும் மீண் டும். முதற் கடிதத்திலே சொன்னதையேதான் வற்புறுத்திக்கடறி உன்னேத் தடுப்பேன். ஆம், ஆயிரம் ரூபாய்க்குமேல் செலவுசெய்து கொண்டு அநாவசியமாக மூன்று மாதம் வீவு வேறு எடுத்துக் கொண்டு எதற்காக இங்கே வந்து சிரமப்படவேண்டும் என்றுதான் திரும்பத் கிரும்பக்கடறுவேன். இனி அதையெல்லாம் எழுதி என்ன பயன்? பாவம், சின்ன வயசிலேயே பெற்ருேபை இழந்து பலபல சிறுமைகளே அநுபவித்த அந்தப் பெண்ணின் மேல் உள்ள பாசத் தால் நீ பணம், உத்தியோகம் முதலியவைகளைக் கூட லட்சியம் செய்யாமல் நன்மை செய்ய நினைக்கிறபோது நான் ஏன் தடுக்க வேண்டும்? அந்தப் பெண்ணுக்குக் கட்டின புருஷனும் வகையில்ல. மீ இத்தனே தூரம் பொறுப்பாகச் செய்வது மெச்சத்தகுந்ததே. நான் இன்று இரவு கிளம்பிச் செல்கிறேன். நீ உன் செளகரி யம்போலக் கிளம்பிவந்து சேர். இத்துடன் வீட்டுக்காரர் உன் பேருக்குக் கொடுத்த அட்வான்சுத் தொகையின் ரசிதும் இருக் கிறது. என் புதிய விலாசம் பிறகு தெரிவிக்கிறேன். பின்னர் : பம்பாய் வந்து சேர்ந்த விவரத்திற்கும், உன் மருமாளின் உடல் கிலேக்கும் பதில் எழுது. -ராதாகிருஷ்ணன்.' கடிதத்தைப் படித்து முடித்த பாஸ்கரன் பிரளயத்திலே சிக் கித் திக்கு முக்கலாடினவன் போலத் தடாலென்று அங்கிருர்த ஈளிசேரில் சாய்ந்தான். r - - 40. பம்பாயில் அறைக்கு வெளியே காலடி ஓசை கேட்டது. ருக்மினி யாகத்தான் இருக்கும் என்று சட்டென்று தன் கையில் இருந்த