பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9? தன்னைப்பற்றிப் பல பொய்க் கதைகளைச் சொன்னுள் ராஜம். ராஜேசுவரி அனேத்தையும் நம்பினள். உபகாரச் சிங்தையுட்ன் ாாஐத்திற்கு உபதேசம் செய்ய முன் வந்தாள். ஆனல் அந்த உய தேசம் கேவலம் உபகாரச் சிந்தையில் எழுந்ததா? ஒருபோதும் இல்லை. ராஜம் எப்படி ரமணியைப் பற்றி விவரம் அறிவதற்காகப் பொய்க் கதைகளே அளந்தாளோ அதே முறையிலே தன் சுய நலன்களே உத்தேசித்துத்தான் ராஜேசுவரியும் அவளுக்குப் பிழைப் புக்கு வகை சொல்வதாகக் குழைந்து பேசிள்ை. -- ராஜத்தின் ஆகிருதி, அழகு, உருவ அமைப்பு, முக லாவண் யம், பார்வை, பேச்சு முதலியவற்றிலே சூழ்ந்து நிற்கும் கவர்ச்சி ஆகியவற்றைக் கண்ட ராஜேசுவரியின் உள்ளம் அவளே உடனே வெள்ளித் கிரையில் கிறுத்திப் பார்த்தது. ஒன்றுக்கும் உதவாத வர்கள் எல்லாம் பிரமாதமான பேரையும் புகழையும் பொருளே யும் அள்ளிக்கொண்டு போகிறபோது இந்த ராஜம் மட்டும் சினி மாவிலே தோன்றினுல் எப்படித்தான் சோபிப்பாள் என்று மன சுக்குள் எண்ணமிட்டாள். காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்தது என்பதுபோல அவள் அவ்வாறு எண்ணமிடுவதற்கும் ராஜம் தன் எதிர்காலத்தைப் பற்றி அவளிடம் முறையிட்டுக் கொண்டதற்கும் மிகவும் பொருத்தமாகப் போய்விடவே, இந்தப் பட்சி நம் வலையிலே சிக்கும் என்கிற தீர்மானத்துடன் இனிய மொழிகள் பல பேசி அவளுக்கு கல்லுபதேசம் செய்வதுப்ோலத் தன் அபிப்பிராயத்தை வெளியிட எத்தனித்தாள். ஆனலும் அதை அத்தனே லேசாக ஓடுகிற ஒட்டத்திலே சொல்லிவிட் மனம் இல்லை. காலையில் விஸ்தாரமாக அதைப் பற்றிப் பேசலாம் எனத் திட்டமிட்டாள். இத்தனையும் எதற்கு? ராஜத்தின் கலனைக் கோரியா? இல்லவே இல்லே. அவளேக்கைக்குள்ளே போட்டுக் கொண்டு, தன் கைப் பாவையாகச் செய்துகொண்டு பட உலகிலே தான் நேரடியான தொடர்பு கொண்டு. அவள் மூலம் நிரம்பப் பணம் சம்பாதித்து, தான் எடுத்துக்கொள்ளலாம் என்கிற பேராசைதான். அவள் எண்ணத்திற்கு ஏற்ப ராஜம் சொன்ன தைக் கேட்கிறேன் என்று சொன்னதும் அவளுக்கு உற்சாகம் தலேகால் புரியவில்லை. படுக்கையில் படுத்தவள் மனக்கோட் டையை மிக மிக வலுவான அஸ்திவாரத்துடன் கட்டத் தொடங்கி மேலும் மேலும் எழுப்பிக் கொண்டே போள்ை. ராஜமோ? அவள் ராஜேசுவரி விரித்த வலையிலே உண்மை யிலேய்ே சிக்கிக்கொண்டுவிட்டாளா? சொன்னதைக் கேட்கிறேன் என்று மனப் பூர்வமாகத்தான் சொன்னுளா? ஒருபோதும் இல்லே. அது ரமணிக்குத் தொடர்புள்ள இடம். அவனேப் பற்றிய புலன் களை அறியக்கூடிய இடம். அவள் அவன் பெயரை மாற்றிப்