பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 249 அறைகள். பல இடங்கள் நெருக்கடியான சந்துபொந்துகளில் இருந்தன. வீண் அலைச்சல்தான் கண்ட பலன். இப்போது குடும்பம் பெரிதாகியிருந்தது. அண்ணா, அண்ணி ஆறு பிள்ளைகள் நான்கு பெண்கள், இரண்டு பையன்கள்) மற்றும் நான். அண்ணியின் அம்மாவும் அடிக்கடி வந்து நீண்ட காலம் எங்களோடு தங்குவது வழக்கம். பின்னர், எங்கள் குடும்பத்தினராகவே தங்கிவிட்டாள். எங்களுக்குப் பல அறைகள் கொண்ட தனி வீடு தான் வசதிப்படும். அப்படியான இடம் நாங்கள் கொடுக்கக் கூடிய வாடகையில் கிடைக்கவே கிடைக்காது. சில அறைகள் கொண்ட சவுகரியமான இடம்கூட ஆயிரம் ரூபாய் வாடகையில் கூடக் கிடைக்கவில்லை. அந்நேரத்தில்தான் வள்ளலார் ஃபிளாட்ஸ் வள்ளலார் குடியிருப்பு பற்றிய தகவல் கிடைத்தது. அங்கு வசதியான ஃபிளாட்டுகள் விற்பனைக்கு இருக்கின்றன; இரண்டரை இலட்சம் ரூபாய்க்கு விலைக்கு வாங்கலாம் உங்கள் குடும்பத்துக்குப் போதுமானதாக இருக்கும் என்று சொன்னார்கள். முன்பு 1950களிலும் 60களின் ஆரம்பத்திலும் என் அண்ணாவும் நானும் வசித்த ஆசிரமம் போன்ற குடிசை இருந்த அழகான தோட்டம் தான் 1980களின் பிற்பகுதியில் குடியிருப்பு அடுக்குக் கட்டிடங்கள் (ஃபிளாட்ஸ்) வளாகமாகப் பரிணாமம் பெற்றிருந்தது. வாழை மரங்கள் வளமாக வளர்ந்து குளுகுளுவெனக் காட்சி தந்த இடம் கத்திரிச் செடிகள், கீரை, தவனம் (மருக்கொழுந்து எல்லாம் பசேலென விளங்க வனப்புடன் இருந்த சூழல்; கிணற்றில் மோட்டார் வைத்துக் குழாய் மூலம் வாய்க்கால் எனத் தண்ணீர் ஜிலுஜிலுவென ஒடி எங்கும் பாய்ந்து வளம் செய்த பிரதேசம் இப்போது காங்கிரீட் கட்டிடங்கள் முளைத்து நிற்கும் வளாகமாக மறுமலர்ச்சி பெற்றிருந்தது. நாங்கள் வந்து பார்த்தபோது அனைத்து ஃபிளாட்டுகளும் கட்டிமுடிக்கப்பட்டிருக்கவில்லை. கட்டிடங்கள் கட்டி விற்பனை செய்வதையே லாபகரமான தொழிலாகக் கொண்டிருந்த நிறுவனம் ஒன்று தோட்டத்தை வாங்கி வீடுகள் கட்டி விற்றுக் கொண்டிருந்தது. பணம் கிடைக்கக் கிடைக்க கட்டிட வேலையை நிறைவு செய்துவந்தது. அரைகுறையான நிலையில் இருந்த பத்தாவது எண் ஃபிளாட் எங்களுக்குத் தரப்பட்டது. முன்பு நாங்கள் வசித்த தோட்ட வீட்டின் எண்ணும் பத்து தான். அந்த வீட்டுக்கு வழி E டெப்போத்தெரு என்று பெயர் பெற்றிருந்தது. E டெப்போத்தெரு முடிந்து, மற்றொரு சந்தின் திரும்பி நடந்து, மீண்டும் திரும்பி ஒரு தடத்தின் வழியே தோட்டத்தை அடைய வேண்டும். வெங்கடசாமி தெரு என்பதன் வழியாகவும் வரலாம். இப்போதோ லாயிட்ஸ் ரோடை ஒட்டிய புதுத்தெருவின் வழியாக வரவேண்டும்.)