பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 233 எண்பது வயதிலும், எவ்வித நோயுமின்றி, உற்சாகமாக உழைக்கக்கூடிய நிலையில் நீங்கள் இருப்பதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? நீங்கள் விசேஷமான பயிற்சி எதுவும்-யோகா போன்றவை செய்கிறீர்களா? இப்படி அவ்வப்போது யாராவது பெரியவர்கள் என்னைக் கேட்கிறார்கள். நான் யோகா எதுவும் செய்வதில்லை. இளம் பிராயத்தில் சில வருடங்கள் தொடர்ந்து யோகாசனங்கள் பலவும் செய்துவந்தேன். பின்னர் பல ஆண்டுகள் உடற்பயிற்சிகள் சில செய்தேன். ஆனால் பிற்காலத்தில் அவற்றைத் தொடரவில்லை. ஆயினும் எப்போதும் நீண்டதுரம் நடக்க நான் தயங்கியதில்லை. நெடுந்தொலைவுகளுக்குக்கூட நடந்துபோய் நடந்தே திரும்புவது என் வழக்கம், இப்போதும் காலை மாலை நேரங்களில் உலா என்று சிறிது தூரம் ஒழுங்காக நடப்பதை நான் கடைப்பிடிக்காவிட்டாலும், அவசியம் நேருகிறபோது நடக்கத்தான் செய்கிறேன். சிறு பிராயத்திலிருந்தே ஒழுக்கமும் கட்டுப்பாடும் என் இயல்பாக வளர்ந்துள்ளன. அன்றாட அலுவல்களிலும் ஒரு ஒழுங்குமுறையைக் கையாள்கிறேன். அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து குளித்துவிடுவது-எப்போதும், குளிர்காலமானாலும் மழைக்காலம் ஆயினும் குளிர்ந்த நீரிலேயே குளிப்பது பிறகு நேரம் தவறாமல் உணவு உண்பது மீதுண் விரும்பாது, குறைந்த அளவு உணவுகளே உட்கொள்வது பகலுறக்கம் கொள்ளாது, இரவில் ஒன்பது மணிக்குப் படுத்துவிடுவது படுத்த உடனேயே ஆழ்ந்த உறக்கம் கொள்வது போன்றவை எனது நடைமுறைப் பழக்கங்களாக உள்ளன. புகையிலையை எந்தவிதத்திலும் உபயோகித்ததில்லை. அதாவது, சிகரெட் ஆகவோ, வெற்றிலையோடு சேர்த்தோ, பிற எவ்வகையிலோ பயன்படுத்தியதில்லை. காய்கறி வகை உணவு தான். அனைத்தினும் மேலாக, நான் கவலைகளை வளர்ப்பதில்லை. கவலைப்படுவதினாலோ, மனசைக் குழப்பிக் கொள்வதாலோ, பிரச்சினைகளை உருவாக்கிப் புலம்பிக் கொண்டிருப்பதனாலோ எதுவும் நிகழ்ந்துவிடப்போவதில்லை. நடப்பன நடந்தே தீரும் நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி, திருப்தி அடையும் உள்ளப்பண்டை நான் வளர்த்துக் கொண்டேன். எதையும் நான் எதிர்பார்ப்பதில்லை. அதனால் ஏமாற்றங்கள் இல்லை. அதற்காக உழைக்காமல் இருப்பதில்லை. எனவே இயல்பாகவே ஒரு மனநிறைவு உள்ளது. மனநிறைவு மகிழ்ச்சியைத் தருகிறது. மகிழ்ச்சியும் கவலையின்மையும் ஆரோக்கியத்தைப் பேணுகின்றன. என்னால் நல்லன அதிகம் செய்யமுடியாது போனாலும், எவருக்கும் தீங்கு செய்யாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடனேயே