பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 71 அவர் ஒருவர்தான் அங்கிருந்தார். ஆனால் பலபேர் இருப்பதற்கு வேண்டிய நாற்காலிகளும் மேஜைகளும் அந்த அறையில் இருந்தன. ஒவ்வொரு நாற்காலி பக்கத்திலும் தனி அலமாரி அதில் சில ஃபைல்கள். அலமாரிமீது நி.சி.நி. ஆசிரியர், ம.மு.ச. ஆசிரியர்' நகைச்சுவைத் துணுக்குகள் ஆசிரியர் என்றெல்லாம் லேபிள் அச்சிட்டு ஒட்டப்பட்டிருந்தது. கோதசதான் இந்த இருக்கையிலிருந்து இன்னொன்றுக்கும். அங்கிருந்து அடுத்ததற்கும் என்று தேவைப்பட்ட குறிப்புகள் - காகிதங்களை எடுப்பதற்காகப் போய் வந்து கொண்டிருந்தார். மேதாவி - குரங்கு என்று ஒரு வாரம் அவர் தன் பெயருக்கு விளக்கம் கொடுத்திருந்தார். நான் மேதாவி என்பது சரிதானே ? அங்கும் இங்கும் தாவித்தாவி வேலை செய்கிறேன் அல்லவா? என்று அவர் தமாஷ் பண்ணினார். 'மற்ற பிரிவுகளுக்கு ஆட்கள் நியமிக்கவில்லையா? என்று கேட்டேன். 'இப்போதைக்கு இல்லை. எல்லாவற்றையும் நான்தான் கவனித்துக் கொள்கிறேன்' என்றார் கோ.த.ச. 'எனக்கு இங்கே வேலை கிடைக்குமா? 'இப்போ புதுசா ஆட்கள் சேர்க்கிறதாக இல்லை. மேலும் உங்களுக்கு இங்கே சரிப்படாது' என்று நண்பர் சொன்னார். 'ஆசிரியர் ஆதித்தனைப் பார்க்கலாமா? 'ஒ. தாராளமா. என்னோடு வாங்க என்று அவர்ஆதித்தன் இருந்த இடத்துக்கு அழைத்துச் சென்று, அவரிடம் என்னைப் பற்றிக் கூறிவிட்டுத் தனது இடத்துக்குத் திரும்பினார் - ஆதித்தன் என்னைப் பற்றி விசாரித்தார். திருநெல்வேலியில் தமிழன் இதழுக்கு எப்படி வரவேற்பு இருக்கிறது என்று கேட்டார். தமிழ் ராஜ்யம்' பற்றிச் சிறிது விவரித்தார். அது சம்பந்தமான துண்டு பிரசுரங்களை எனக்குத் தருமாறு ஒருவருக்கு உத்திரவிட்டார். அவை கிடைத்தன. பத்திரிகையில் எனக்கு ஒரு வேலை வேண்டும் என்பது பற்றி அவரிடம் நான் எதுவும் கூறவில்லை. சிறிது நேரத்தில் விடை பெற்றுக் கொண்டு வெளியேறினேன். மதுரையைச் சிறிது சுற்றிப் பார்த்தேன். ரயில் நிலையம் போனேன். திருச்சிராப்பள்ளிக்கு ரயில் எப்போது போகும் என்று பார்த்தேன். டிக்கெட் வாங்கிக் கொண்டு ரயிலில் பயணமானேன். திருச்சியில் மட்டக்காரத் தெருவில் இருந்தது கலாமோகினி அலுவலகம். ஒரு சிறு அறை தான். அதை ஒட்டிய வீட்டில் வி.ரா. ராஜகோபாலன் குடும்பத்தோடு வசித்தார்.