பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2
ஏழ்மையைப் போக்க
இலக்கிய சேவை செய்தார்


அப்டன் ஸிங்க்ளர் என்ற பிரபல கதாசிரியரை ஒரு பத்திரிகை நிருபர் காணவந்தார். நிருபர், கதாசிரியரைப் பாராட்டும் தன்மையில் “நீங்கள் ஆங்கில இலக்கியத்திற்கு அபாரமான சேவை செய்கிறீர்கள்” என்றார்.

அப்டன் ஸிங்க்ளர் சிரித்துக்கொண்டு “அதெல்லாம் ஒன்றுமில்லை. என்னுடைய வறுமையைப் போக்கிக் கொள்ளவே நான் இலக்கிய சேவை செய்கிறேன்” என்றாராம்.

அப்டன் ஸிங்க்ளர் கூறியதில் பொய்யே இல்லை. அவர் இலக்கிய சேவை செய்யப் புகுந்ததே தம் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகத்தான். அதே நோக்கத்தில்தான் அவர் இடைவிடாமல் நாவல், சிறுகதை கட்டுரை முதலியவற்றை எழுதி வந்தார்.