பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்

13


பணக்காரரானபிறகும்கூட, அவருக்கு அம்மாதிரியான சிறு இடத்தில் வசிக்கத்தான் அதிக பிரியம், இதற்கு மற்றொரு காரணத்தையும் கூறலாம். அவர் ஏராளமாகப் பணம் சம்பாதித்த பிறகு ஒரு பெரிய மாளிகையை வாங்கினார். அதில் போய்ச் சில நாட்கள் தங்கினார். ஆனால், ஒருநாள் அவர் குடும்பத்துடன் வெளியே போயிருக்கும் சமயம் வீட்டில் நெருப்புப் பற்றிக் கொண்டு விட்டது. அப்டன் ஸிங்க்ளர் வெளியிலிருந்து வருவதற்குள் வீடே எரிந்து சாம்பலாகிவிட்டிருந்தது. இதைக் கண்ட பிறகு, அப்டன் ஸிங்க்ளர் பெரிய மாளிகையில் குடியிருப்பதைக்கூடக் குறைத்துக் கொண்டார். அதேபோல, வாழ்க்கையில் ஆடம்பரச் செலவுகளை எல்லாம் வெறுத்தார் ஆடம்பரமாகச் செலவு செய்வதை மிச்சப்படுத்தினால் அதை வறுமையால் கஷ்டப்படுபவர்களுக்குக் கொடுக்கலாமே என்பது அவர் எண்ணம்.