பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3
ஒரு புத்தகத்தை வாங்க இயலாதவர்


டாக்டர் ஏ.எம். ரோஸ் என்பவர் எழுதிய “கனடா தேசத்துப் பறவைகள்” என்ற புத்தகத்தை வாங்கவே, எர்னஸ்ட் தாம்சன் ஸெடான் என்பவர் ரொம்பவும் கஷ்டப்பட்டவர். 90 சென்ட் விலையுள்ள அந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்கவேண்டும் என்ற அவா அவருக்கு அளவு கடந்து இருந்ததால் அவர் கஷ்டங்களைப் பொருட்படுத்தவில்லை. மிகுந்த முயற்சியின் பேரில் அவர் அந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்தார்.

இவ்வளவு வறுமை நிலையிலிருந்த ஸெடான் பிற்காலத்தில், ஒரு பிரபல பிராணி நூலாசிரியராகவும், பிராணிகளை வரையும் சிறந்த சித்திரக் காரராகவும் ஆனார் என்றால், அவருடைய ஆவல் எத்தகையது என்பதை பார்த்துக் கொள்ளுங்களேன்.

ஸெடானுடைய தகப்பனார் ஒரு காலத்தில் பெரிய பணக்காரராக இருந்தார். அவருக்குச் சொந்தமாகப் பல