பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்


கப்பல்கள் இருந்தன. ஸெடானுக்கு ஐந்து வயதாக இருக்கும்போது, அவருடைய தகப்பனாருக்கு, வியாபாரத்தில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. அதன் காரணமாக எல்லா சொத்துக்களும் பறிபோயிற்று. வறுமை நிலையை எய்திய ஸெடானின் குடும்பம் கனடா தேசத்தை விட்டு வெளியேறி டோரன்டோவுக்கு சென்று குடிபுகுந்தது. அங்கு சென்ற பிறகு ஸெடான் பள்ளியில் படிக்கத் தொடங்கினார். அவருக்குப் பிராணி நூலில் அதிகப் பற்றிருந்தது. ஆனால் அவருடைய தகப்பனாருக்கோ அது பிடிக்கவில்லை. பிராணி நூல் படிப்பின் மூலம் எதிர்காலத்தில் யாதொரு பலனும் ஏற்படாது என்று அவர் கருதினார் இச்சமயத்தில்தான் முன்னர் குறிப்பிட்டதுபோல் டாக்டர் ரோஸுடைய பறவை நூல் வெளியாயிற்று. மிகவும் கஷ்டப்பட்டு அதை வாங்கிய ஸெடானுக்கு, அதைப் படித்தபிறகு பிராணிகள் சம்பந்தமாக ஆராய்ச்சி நடத்தவேண்டும் என்று தோன்றிற்று. அதற்காக அருகில் உள்ள காடுகளுக்கு அடிக்கடி அவர் போய்விடுவார். அங்கு பறவைகளையும் பிராணிகளையும் கண்டு அகமகிழ்வார். அவருடைய செய்கையை தகப்பனார் ரொம்பவும் கண்டித்துப்பார்த்தார். அதனால் ஒன்றும் பயனில்லை என்றதும் பையனை வேறு வழியில் திருப்ப நினைத்தார். பையனைச் சித்திரக்காரனாக ஆக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கிலாந்துக்கு அவரை அனுப்பினார். வாரம் மூன்று டாலர்கள். அவருடைய செலவுக்காக அனுப்பி வந்தார்.