பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4
பிரபல விஞ்ஞானி பள்ளியில் மக்கு


கிராமபோனைக் கண்டுபிடித்த விஞ்ஞானி தாமஸ் எடிசனுக்கு ஞாபகசக்தி துளிகூடக்கிடையாதாம் பள்ளியில் படிக்கும்போது அவரை ஆசிரியர்கள் ‘மக்கு, என்று சொல்வார்கள். ஆசிரியர்கள் சொல்லிக்கொடுப்பதை அவர் கேட்ட நிமிஷமே மறந்து விடுவாராம். இதனால் ஆசிரியர்களுக்கு பெரிய பிரச்சனையாகி விட்டது. இதை அவர்கள் எடிசனுடைய பெற்றோர்களிடம் சொன்னார்கள். அவர்கள் உடனே டாக்டரைக் கூப்பிட்டு எடிசனுக்கு இருக்கும் குறையைச் சொன்னார்கள். எடிசனை பரிசோதனை செய்த டாக்டர்கள், மூளைக்கோளாறு இருக்கிறது என்று கூறினார்கள். இதனால் பெற்றோர்கள் பெரும் கவலையாகி விட்டது. எடிசன் வாழ்க்கையிலேயே மூன்று மாதம்தான் பள்ளிக்குச் சென்றிருக்கிறார். பிறகு அவர் படித்து, கற்றுக்கொண்டதெல்லாம் அவருடைய தாயாரிடம் தான் அவருடைய தாயார் பிள்ளைக்கு இருக்கும் மூளைக் கோளாறை எண்ணி பள்ளிக்கு அனுப்பாமல் தானே