பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10
“பணத்தை எப்படி செலவழிப்பது” என்று தெரியாதவர்


“பணக்காரராக இருந்து இறப்பதே வெட்கப் பட வேண்டிய விஷயம்” என்று ஒருவர் கருதினால் அவரைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்? அத்துடன் தம்மிடமுள்ள பணத்தை எந்த வகையில் செலவு செய்தால் நன்றாக இருக்கும் என்று பொது மக்களிடம் ஆலோசனை கேட்டால் என்ன சொல்வீர்கள்? ஆனால் இப்படிக்கூட யாராவது செய்வார்களா என்று தான் கேட்பார்கள்.

ஆன்ட்ரூ கெரனகி என்ற கோடீஸ்வரர் இறுதிக் காலத்தில் தாம் பணக்காரராக சாக விரும்பவில்லை, அதன் காரணமாக, அவர் பத்திரிகைகளில், தம்மிடமுள்ள பணத்தை எந்த வழியில் செலவு செய்தால் நன்றாக இருக்கும் என்று யோசனை கேட்டு விளம்பரம் செய்திருந்தார். நல்ல யோசனைகளைச் சொல்பவர்களுக்குப் பரிசும் கொடுப்பதாக அறிவித்திருந்தார். இதைக் கண்டு பலர் நகைக்கத்தான்