பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



17
வேடிக்கையான கதாசிரியர்


1835 ம் வருஷம் ஒரு வால் நட்சத்திரம் வானத்தில் தோன்றியது. அம்மாதிரி நட்சத்திரம் 76 வருஷங்களுக்கு ஒரு முறைதான் தோன்றுமாம். வால் நட்சத்திரம் தோன்றிய சமயத்தில் ஒருவர் பூவுலகில் பிறந்தார். அவர் பிறந்தபோது வானத்தில் தோன்றிய வால் நட்சத்திரம் பற்றி பெற்றோர் அடிக்கடி பேசிக்கொள்வார்களாம். இதைக்கேட்டுக் கொண்டிருந்த பையனுடைய மனத்தில் ஒரு எண்ணம் ஏற்பட்டது. அது தீவிரமாகவும் ஆயிற்று பையனுடைய மனதில் தோன்றிய எண்ணம் இதுதான்: தான் ‘இறப்பதற்குள் அந்த வால்நட்சத்திரத்தைப் பார்த்து விட வேண்டும் என்பதே’. இதைச் சிறுவன் தன் பெற்றோரிடமும் நண்பர்களிடமும் சொல்லுவானாம். அதைக் கேட்டவர்கள் கைகொட்டி நகைக்கத்தான் செய்தார்களாம் ஆனால், பையன் சொல்லியபடியே தான் நடந்தது. அவன் பிறக்கும் போது தோன்றிய எண்ணம், மரணப்படுக்கையிலிருந்தவாறு வால்நட்சத்திரத்தை பார்த்தபிறகே உயிர் உடலை விட்டுப் பிரிந்தது. இது கட்டுக்கதையல்ல. இது மார்க்ட்வைன் என்ற