பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
18
தாய் கண்ட கனவு மகனால் பலித்தது


மின்டா மார்டின் என்ற மாது 1886ம் வருஷம் ஜனவரி மாதம் 15ம் தேதி ஒரு கனவு கண்டார். அவர் ஆகாயத்தின் ஒரு யந்திரத்தில் பிரயாணம் செய்வது போல் கனவில் கண்டார். கனவு கண்ட பிறகு, இது நடக்குமா? என்று அவர் தன்னையே பலமுறை கேட்டுக் கொண்டார். மேலும் அக்காலத்தில் ஆகாய விமானங்களே கிடையாது. இதனால் தான் கண்டது மனப் பிரமையின் மூலம் ஏற்பட்டது தான் என்று எண்ணி சும்மா இருந்து விட்டார். ஆனால், அவர் மண்தில் கனவைப் பற்றிய சிந்தனை மாத்திரம் எப்போதும் நினைவில் இருந்து கொண்டே இருந்தது.

மார்டின் தென்மேற்கு கான்ஸாஸில் வசித்துக் கொண்டிருந்தார். அவருடைய கணவர் சாதாரண அந்தஸ்திலேயே இருந்தார். இதனால் குடும்பம் சாதாரண நிலையிலேயே இருந்தது. இச்சமயத்தில் மார்டின் ஒரு ஆண் குழந்தைக்கு தாயாரானார். குழந்தை வளர்ச்சி பெற்றது.