இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தியாகமே வாழ்வின் வழி
வாழ்க்கை நன்மையில் நாட்டங் கொண்டது. நன்மையில் நாட்டங் கொள்வதே வாழ்க்கை. வாழ்க்கையின் பொருள் இதுதான் என்று மனித சமூகம் முழுதும் முற்காலத்தில் உணர்ந்திருந்தது: இப்போதும் உணர்ந்திருக்கிறது ; இனியும் உணரும். சிந்தனையற்ற சாதாரண ஜனங்கள் மனிதனின் நன்மை அவன் உடல் சம்பந்தமான மிருக வாழ்வின் நலன்தான் என்று கருதுவார்கள்.
வாழ்க்கையில் முக்கியமான நன்மையடைதல் என்ற பகுதியை விட்டுவிட்டுப் போலி விஞ்ஞானம் உடலின் மிருக வாழ்வே வாழ்க்கை யென்று கருதுகிறது. அறிவில்லாத ஜனங்கள் என்ன தவறு