பக்கம்:வாழ்க்கை நலம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

வாழ்க்கை நலம்

ஆன்மாவைப் பற்றி ஆன்மாவின் வாழ்க்கையைப் பற்றி ஆய்வு செய்தவர் காரல் மார்க்ஸ். “ஆன்மா” “ஜீவன்” என்ற சொல் வழக்கை ஏற்றுக்கொண்டுள்ளார் என்பது உண்மையானாலும் “ஆன்மா”வை ஏற்றுக்கொண்டதாக கூற முடியாது.

ஆன்மாவைப் பற்றி அ றி வி ய ல் பார்வையில் ஆய்வு செய்ய வேண்டும். ஆன்மா என்பது என்ன? ஆன்மா இயற்கையிலிருந்து முகிழ்த்ததா? அல்லது பிறிதொரு பொருளால் படைக்கப்பட்டதா? ஆன்மா தோற்றமும் அழிவும் உடையதா? அல்லது நிலைத்தன்மை உடையதா? ஆன்மா, அறிவுப் பொருளா? அறிவிக்க அறியும் அறிவுப் பொருளா? ஆன்மாவின் இலட்சியம் தான் என்ன?

ஆன்மாவின் வாழ்க்கையில் நன்றும் தீதும் - இன்பமும் - துன்பமும் குறுக்கிடுவது எப்படி? எதனால்? ஆன்மாவிற்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு? இன்னோரன்ன வினாக்களுக்கு விடை காணும் ஒரு வகையான அறிவியலே ஆன்மவியல்; அறிவே வாழ்க்கைக்கு ஆக்கம் தரும். ஆதலால், அறிவியலும் அருளியலும் ஒருசேர ஆராயத்தக்கன! அறியத்தக்கன! அருளியலின் முடிவுகளே அறிவியலுக்கு வாயில்கள்! அறிவியலின் முடிவுகள் அருளியலுக்கு ஆக்கமாக ஆவன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை_நலம்.pdf/12&oldid=1132991" இலிருந்து மீள்விக்கப்பட்டது