பக்கம்:வாழ்க்கை நலம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

வாழ்க்கை நலம்


போவதில்லை. விரைவில் கொதி நிலை மாறும்; ஆமை அழியும்; இதனை உணரும்சக்தி ஆமைக்கு இல்லை. ஆமைக்கு மட்டுந்தானா? மனிதர்களிலும் பலர் இப்படித்தான் வாழ்கின்றனர்.

பெரும்பான்மையான மக்கள் காலப்போக்கில் துன்பம் விளைப்பனவற்றையே இன்பமெனக் கருதி வாழ்ந்து ஏமாற்றத்திற்கு ஆளாகின்றனர். இதனைத்திருவள்ளுவர்.

     "எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
      மெய்ப்பொருள் காண்ப தறிவு" (குறள்—355)

என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை_நலம்.pdf/132&oldid=1133326" இலிருந்து மீள்விக்கப்பட்டது