இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
130
வாழ்க்கை நலம்
போவதில்லை. விரைவில் கொதி நிலை மாறும்; ஆமை அழியும்; இதனை உணரும்சக்தி ஆமைக்கு இல்லை. ஆமைக்கு மட்டுந்தானா? மனிதர்களிலும் பலர் இப்படித்தான் வாழ்கின்றனர்.
பெரும்பான்மையான மக்கள் காலப்போக்கில் துன்பம் விளைப்பனவற்றையே இன்பமெனக் கருதி வாழ்ந்து ஏமாற்றத்திற்கு ஆளாகின்றனர். இதனைத்திருவள்ளுவர்.
"எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு" (குறள்—355)
என்றார்.