பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 41

தலைமகள்பால் தன் உள்ளத்தைச் செல்லவிட்ட முல்லைக்கலித் தலைமகன் தன் உயிரை அவள் வாங்கிக் கொண்டுவிட்ட நிலையையும் அவ்வாறு கொண்டதனால் அது பிற்காலத்தில் அவனுக்கு இன்பம் தருதல் ஆற்றாது என்றும் கூற வருபவன்,

எவ்வம் மிகுதர எந்திறத் தெஞ்ஞான்றும் கெய்கடை பாலின் பயன்யாதும் இன்றாகிக் கைதோயன் மாத்திரை யல்லாது செய்தி அறியாது அளித்தென் உயிர்

எனக் கூறுகின்றான். கெய் பால் ஆகிய உணவுப் பொருள்கள் இவ்விரண்டு உவமைகளில் இடம் பெறுதலை இப்பகுதி அறிவித்து கிற்கின்றது.

தோன்றிப்பூ மலர்தல்

தோன்றிப்பூ செக்கிறமாக மலர்தலை இருவேறு உவமைகளால் விளக்கி கிற்கின்றன கார்காற்பதும் முல்லைப்பாட்டும். காயா மலர்கள் கறுப்பு நிறமாக மலர்ந்து கிற்றலை முல்லைப்பாட்டும் முல்லைக்கலியும் உணர்த்துகின்றன.

தோடார் தோன்றிக் குருதி பூப்ப -முல்லை

என முல்லைப்பாட்டும்,

கலமிகு கார்த்திகை காட்டவ ரிட்ட தலைநாள் விளக்கின் தகையுடைய வாகிப் பலமெலாம் பூத்தன தோன்றி -காரி

எனக் கார்காற்பதும் குறிக்கின்றன. காயாம்பூ மலர்தலை,