பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு திறனாய்வு நோக்கு

தோற்றுவாய்

ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியனார் தம் தொல்காப்பியத்தில் அகத்திணையியலில் அகப் பொருட்குரிய திணைகளை,

கைக்கிளை முதலாப் பெருங்திணை இறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை என்ப” என ஏழு திணைகளைக் கூறுகின்றார். கைக்கிளை, குறிஞ்சி, முல்லை, மருதம்,நெய்தல், பாலை எனும் ஏழு திணைகளுக்கும் புறனான பாடாண், வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி என்ற புறத் திணைகள் ஏழனைப் பிற்படப் புறத்திணை இயலில் கூறுகின்றார்.

பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே? வெட்சி தானே குறிஞ்சியது புறனே? வஞ்சி தானே முல்லையது புறனே! உழிஞை தானே மருதத்துப் புறனே” வாகை தானே பாலையது புறனே?

காஞ்சி தானே பெருந்திணைப் புறனே"