66 வாழ்வியல் நெறிகள்
மாட்டாமல் வருந்துகின்றாள். அவள் பூப்போன்ற கண்களினின்று ம் முத்துப் போன்ற கண்ணிைர்த் துளிகள்துளிர்த்து நிற்கின்றன.
நல்ல கல்லோர் வாய்ப்புள் தெவ்வர் முனைகவர்ந்து கொண்ட திறைய வினைமுடித்து வருதல் தலைவர் வாய்வது நிேன் பருவரல் எவ்வம் களைமாயோ யெனக் காட்டவும்-காட்டவும் காணாள் கறுழ்சிறந்து பூப்போ லுண்கண் புலம்ப முத்துறைப்ப” தலைவி தனிமைத் துயரால் வாடுகின்றாள். இவ் வாறாக முல்லைப்பாட்டு ஆசிரியர் கப்பூதனார் பாடலின் தொடக்கத்தில் முதல் இருபத்து மூன்று அடிகளில் முல்லைத்திணை ஒழுக்கமான இருத்தலை’ மிக அழகாக அமைத்துச் செல்கின்றார்.
வஞ்சி ஒடுக்கம்
LJITL லின் முதற்பகுதியில் தலைவியின் ஆற்றாமை நிலையைக் கூறியவர் அடுத்த பகுதியில் வஞ்சி ஒழுக்கத்தை-எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகச் சென்று அடல் குறித்த செயலை விளக்கு கின்றார். வேந்து வினை காரணமாகப் பிரிந்த தலை மகன் பாசறை அமைத்து அப்பாடி வீட்டில் தங்கி யிருந்தமையை-பாசறை நிலையை மிகத் தெளிவாக விளக்கிச் செல்கின்றார்.
பாசறை அமைப்பு
போர்மேற் சென்ற தலைமகனும் அவன் வீரர் களும் காட்டாறு சூழ்ந்த அகன்ற நெடிய புறவில் சேணாறு பிடவம், பசிய துாறுகளையும் வெட்டி,