பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உாசிடரி சி. பாலசுப்பிரமணியன் 77

ஒடுகின்ற வளையைத் திருத்திக் கொண்டும், மையல் கொண்டு உயிர்த்தும், பகழி பாய்ந்த மஞ்ஞையினைப் போல் கடுங்கி இழை நெகிழ எழுநிலை மாடத்தின்கண் இருந்து முடங்கிறைச் சொரிதரு மாத்திரளருவியின் இன்பல் இமிழிசையைக் கேட்டு கிற்கின்றவள். அவ்வாறு கிற்கின்றவள் தன் தலைவன் அக் காலத்தில் கூறிச் சென்ற சொற்களை கினைந்து பார்க்கின்றாள்.

உடனே அவனுக்குத் தலைமகள் உருமிடி வானம் முழக்குகின்ற கார்காலத்தில் திரும்பி வருவ தாகக் கூறித் தான் வந்துணையும் அவளை ஆற்றி யிருக்குமாறு கூறிச் சென்ற சொற்கள் நினைவிற்கு வருகிறது. வரவே தலைமகன் கூறிச் சென்றிருப் பதால் அவன் சொற்களை மீறி இவ்வாறு வருந்துதல் தன் ஆருயிர்த் தலைவன் பெருமொழியைத் தவறிய தாம் என்று கருதித் தன்னைத் தானே தேற்றிக் கொண்டு பிரிவுத் துயரை ஆற்ற நினைக்கின்றாள். இவ்வாறு தலைமகள் இன்துயில் வதியுகனைக் காணாது கெஞ்சாற்றுப் படுத்த கிறைதபு புலம்பொடு எண்ணுகின்றமையை ஆசிரியர் கப்பூதனார் நீடு நினைந்தேற்றியும் ஒடுவளை திருத்தியும்’ என்ற பகுதிவழி உணர்த்துகின்றார்.

-