பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் . பாலசுப்பிரமணியன் 83

கடுங்கொலை நீக்கிக் கடவுட் காப்பு செங்கீரை தால் சப்பாணி முத்தம் வாரானை முதல் வகுத்திடும் அம்புலி சிறுபறை சிற்றில் சிறுதேர் என்ன பெறுமுறை ஆண்பாற் பிள்ளைத்தமிழ்

-இ.வி பா. 46

அவற்றுள்,

பின்னைய மூன்றும் பேதையர்க் காகா ஆடும் கழங்கு அம்பானை ஊசல் பாடும் கதியால் பகுத்து வகுப்புடன் அகவல் விருத்தத்தால் கிளையனவாம்.

-இ.வி.பா.47

துரு கொலை நீக்கித் தெய்வக் காப்பாய் சுற்ற

தொகையளவு வழுப்பகவல் விருத்தங் தன்னால் முறைகாப்பு செங்கீரை தால் சப்பாணி

முத்தம் வாரானையம் புலியி னோடு சிறுபறை சிற்றில் சிறுதேர் இவையின் மூன்றும்

தெரிவையர்க்கு பெருங்கழங்கம் மானை ஊசல் பெறுமூன்று முதலிறுபத் தொன்றுலொன்றை

பெறுதிங்கள் தவிற்பிள்ளைக் கவியைக் கொல்லோ.

-சிதம்பரப் பாட்டியல்

என இலக்கண விளக்கப் பாட்டியலும், சிதம்பரப் பாட்டியலும்,பிள்ளைத்தமிழ்ப் பருவங்களை உணர்த்தி நிற்கின்றன. கலிவிருத்தம், கலிப்பா ஆகிய இப்பாக்கள் பிள்ளைத்தமிழில் இடம்பெறத்தக்க பாவகைகள் ஆம்.

தான் போற்ற வந்த தலைவனையோ, தலைவி யையோ குழந்தைப் பருவத்தராக எண்ணி அக்குழந்தை யின் மூன்றாம் திங்கள் தொடங்கி இருபத்தொன்றாம் திங்கள் வரை இரண்டு திங்களுக்கு ஒன்றாகப்