பக்கம்:வாழ விரும்பியவன்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலப் பெருமை பர்வதத்தாச்சிக்குப் பெருமையாவது பெருமை! தன் வீட்டைப் பற்றி, குடும்பத்தைப்பற்றி, தான் பிறந்த ஊரைப்பற்றி, வாழ வந்த இடத்தைப் பற்றி எல்லாம். o செயலான குடும்பத்திலே பிறந்து செயம் செயம் என்து போட்டு அடிச்சவோ குடும்பத்திலே புகுந்தவள் அவன். பெரிய வீட்டு ஐயா இரண்டு கையாலும் ஆன்னிக் கெர்ண்டு வந்தார். வீட்டை மேலும் பெரியதாகக் கட்டிஞர். திலக் நீச்சு, செர்த்து சுகம் எல்லாம் ராஜவாழ்வு தான். பின்னே பெருமை இருக்காதா குடும்பத் தலைவிக்கு? - தாலி அறுத்தால் தாசில் உத்தியோகம் வந்தது மாதிரி என்று ஆச்சி பிறந்துவளர்ந்த வட்டாரத்தில் சொல்வது .ண்டு. இதையும் அவளேதான் பெருமையாகச் சொல்லிக் கொள்வாள். பெண்களுக்கு இப்போது மாதிரி சுதந்திரம் இல்லாத காலம் அது மந்திரி பதவி, எம். எல். ஏ., எம்.பி. போன்ற விஷயங்கள் எல்லாம் தலை தூக்கியிராத காலமும்கூட. அத்த வட்டாரத்துப் பிள்ளைகளுக்குத் தாசில் உத்தியோகம்தான் ரொம்பப் பெரிதாக- அதிகார வசதிகளும் வாய்ப்புகளும் அதிகம் உடையதாகத் தேர்ன்றியதில் வியப்பே கிடையாது. சர்வதத்தாச்சியும் அப்படிப்பட்ட அந்தஸ்தான நிலையில் இருந்தான். அவள் பெயரில் சொத்தும் கையில் ரொக்கமும் மிகுதியாக இருந்ததினுலே, அவளே அண்டி வாழ்ந்தவர்கள் அவனே ஒரு ஜமீந்தாரினியாகவும், ராணி போலவும் மதித்து வத்தார்கள். அவ்வப்போது பண உதவி பெறுவதற்காகவும் அவள் தயவைப் பெற்று, அவளுக்குப் பிறகு அவளுடைய சொத்தில் கணிசமான பங்குகளே அடைவதற்காகவும், அந்தப் பெரியம்மாளே அப்படி மதிப்பதாக அகர்கள் நடிக்கவாவது செய்தார்கள். - - ஆகவே, ஆச்சிக்கு அவள் குடும்பத்தினர் மீதும், குடும்: கெளரவத்தின் மேலும் அதிகமான பெருமை உண்டு. எப்படிப் 35