பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வா இத்தப் பக்கம் * 70

மூளைக்கு வேலை வைப்பானேன் என்று நினைக்கும் சிலர் பிள்ளைக்குக் குலசாமி பெயரை வைப்பார்கள். இன்னும் சிலர் குடும்பப் பெருமை கொடிகட்டிப் பறக்க வேண்டும் என்று தாத்தா பெயரை வைப்பார்கள். அதற்குப் பிறகு அத்தப் பேரன் (தாத்தா பெயரன்) 'எங்கள் தாத்தாவுக்கு ஒரு பெயர் இருந்தது .... என்று அவர் பெயரை வாழ வைத்துக் கொண்டிருப்பான். பேரனுக்கு மகன் கொள்ளுப் பேரனாம்; கொள்ளுப்பேரனின் மகன் எள்ளுப் பேரனாம். இந்தக் கொள்ளு, எள்ளு வியாபாரம் நடப்பதெல்லாம் தாத்தாவால் தானே!

ஒரு குடும்பத்தில் இரண்டு மூன்று ஆண்கள் இரண்டு மூன்று பெண்கள் இருந்தால் போதும்... அவர்கள் வயிற்றுப் பிள்ளைகளில் பாதிப்பேருக்கு மன்னார் சாமி அல்லது மாடசாமி என்று தாத்தா பெயர் அமைந்துவிடும். ஒவ்வொரு தாத்தாவும் காந்தியைப்போல் நேருவைப் போல் பெயர் விளங்கும் பெருமகனாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.... பெயர் வழங்கும் பெருமகனாக (Namelender) g)(öğzırd, Gunğıb.

எந்த ஊரும் நரிக்குறவர்களுக்குச் சொந்தமல்ல... ஆனாலும் அவர்கள்தான் பூமி புத்திரர்கள்-மண்ணின் மைந்தர்கள் எந்த ஊரில் தங்கியிருக்கிறார்களோ அந்த ஊரின் பெயரை மறக்காமல் அங்கே பிறக்கும் பிள்ளைக்கு வைக்கிறார்கள். டில்லியில் பிறந்தால் அவன் பெயர் டில்லி......

அவனைப் பார்க்கும்போது ஆனந்தமாக 'என்னடில்லி, குதுப்மினாரெல்லாம் நலந்தானா?” என்று ஒரு வார்த்தை கேட்கலாம்.